Home சினிமா கே.ராஜன் மரணத்திற்கு பண நெருக்கடி தான் காரணமா?

கே.ராஜன் மரணத்திற்கு பண நெருக்கடி தான் காரணமா?

சமீபத்தில் காலமான பிரபலத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் திடீர் தற்கொலைக்கு, அவரது மோசமடைந்து வந்த உடல்நலக் குறைபாடும், சக தயாரிப்பாளர்கள் சிலருக்கு அவர் கொடுத்திருந்த பல கோடி ரூபாய் கடன் பணம் திரும்பக் கிடைக்காமல் போனதுமே முக்கியக் காரணம் என்று அவரது மகள் ராஜேஸ்வரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தந்தையின் மறைவு குறித்துப் பேசிய அவர், கடந்த சில மாதங்களாகவே கே.ராஜன் கடுமையான உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதோடு திரையுலகில் நம்பிப் பணம் கொடுத்த சில தயாரிப்பாளர்கள் நீண்ட நாட்களாகத் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரட்டைப் பாதிப்புகளால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியும் மன அழுத்தமுமே, அவரை இத்தகைய வீரியமான தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியிருக்கலாம் என்று கூறியுள்ள ராஜேஸ்வரி, தன் தந்தையின் மரணத்திற்குத் திரையுலகைச் சேர்ந்த சிலரது பண மோசடியே பிரதானக் காரணம் என்பதால், காவல்துறை இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தங்களுக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் அல்லது உங்கள் நண்பர்கள் ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தால் கீழே உள்ள எண்களை அவர்களுக்கு கொடுங்கள்.

🙏சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours)

மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours)

Exit mobile version