கோகுல்ராஜ் கொலை வழக்கில் சங்கர், செந்தில்குமார், அருள்செல்வம், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் மீது, திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு – வழக்கறிஞர் விளக்கம்:
நேரடி சாட்சி சுவாதி பிறழ் சாட்சியாக மாறினாலும் சிசிடிவி அடிப்படையில் தண்டனை. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கு இது.அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி காட்சி வழக்கின் பிரதான ஆவணமாக இருந்தது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு வழக்கறிஞர் மோகன் தீர்ப்பு குறித்து விளக்கம்.
யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு. 5 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு. தண்டனை விவரம் வரும் 8.3.2022 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி சம்பத் குமார் அறிவிப்பு.
