புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 29, 30தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு.
புயல் கரையை கடந்தபின் உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் – துறைமுகங்களில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
புயல் அருகில் உருவாவதை குறிப்பது 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த அறிவுரை.
