Home Uncategorized மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரேவதி

மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரேவதி

நடிகை ரேவதி, இவர் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்குவதிலும் கவனமாக இருந்தார். 

முதல் படமாக 2002-ல் ‘மித்ர மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தார். இந்தப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது. இதையடுத்து 2004-ம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தை இயக்கினார். 

பின்னர் 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘கேரளா கபே’ என்ற படத்தை பத்து பிரபலமான இயக்குனர்கள் எடுத்தனர். அதில் ரேவதியும் ஒருவர். 

தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். 

இதனிடையே, இந்தியில் தயாராகும் ‘தி லாஸ்ட் ஹரா’ என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க இருக்கிறார். இதைத் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்து இருக்கிறார் கஜோல்.

Exit mobile version