அண்மையில் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் மொய் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிதான் மொய் விருந்து” என விமர்சித்தார்.
இந்நிலையில் தினகரன், “வட்டியில்லாமல் கடன் தந்து ஒருவரை கை தூக்கி விடுவது தான் மொய் விருந்து. கர்நாடகாவில் இருந்து வந்த உங்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை” என கூறினார்.
