Home Uncategorized தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது சிலர் பாலியல் தொல்லை அளித்ததாக அமலா பால் புகார்

தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது சிலர் பாலியல் தொல்லை அளித்ததாக அமலா பால் புகார்

ஃபீல்டில் பெரிய வாய்ப்பு  கிடைக்காத ஆக்டரஸ்களில் ஒருவர் அமலா பால் . 

இந்த அமலாபாலுக்கு கடந்த 2018ம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பினை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுச்சு. இதையடுத்து அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து (6T) பூவி திரைப்பட நிறுவனத்தினை கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார்சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக பவ்நிந்தர் சிங் தத் கூறி பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிஞ்சிட்ட்டாய்ங்க.

இந்நிலையில் அமலா பால் சார்பில் விழுப்புர மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் ஒன்று அளிக்கபட்டிருக்குது. 

அதில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது சிலர் பாலியல் தொல்லை அளிச்சதா புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அருகே இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாவும் புகார் அளிச்சு இருந்தார். 

கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். கூடவே பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும்,தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக கடந்த 26 ஆம் தேதி எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளிச்சார்

அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செஞ்சு முதலியார் சாவடியில் இருந்த பவ்நிந்தர் சிங் தத் இன்னிக்கு கைது செய்து விசாரணை செஞ்சு வாராய்ங்க

Exit mobile version