கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூரில் தாய் மூகாம்பிகை கோவில் உள்ளது. சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். இசைஞானி இளையராஜா, தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் ஆவார்.
இந் நிலையில் இன்று கொல்லூர் இளையராஜா மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகளை அவர் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
