Home Uncategorized முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா?

தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைபெரியாற்று அணையின் பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை பொறியாளர்கள் மேற்கொள்ளும் போது, அந்தப் பணிகளை கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனடிப்படையில் மட்டும் தான் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

Exit mobile version