Friday, March 13, 2026
HomeUncategorizedநிலவில் முதன்முதல் காலடி

நிலவில் முதன்முதல் காலடி

நிலவில் முதன்முதல் காலடிவைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் காலமான தினமின்று அமெரிக்காவின் ஓகியோ நகரில் கடந்த 1930 ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். விஞ்ஞானத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

படிப்பு முடித்த பின்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது, சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டி போட்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன.

அந்த காலத்தில் நிலவுக்கு சாட்டிலைட் அனுப்புவதே பெரிய சாதனையாக கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியது.

அப்போது விண்வெளி பயணத்துக்கு தேர்வானவர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர். கடைசியில் கடந்த 1969ம் ஆண்டு அப்போலோ11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார்.

4 லட்சம் கி.மீ. தூரப் பயணத்துக்கு பின் 1969 ஜூ¨லை 20ம் தேதி நிலவில் அப்போலே தரையிறங்கியது. விண்கலத்தில் வெளியில் வந்த நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதன்முதல் தனது காலடியை பதித்தார்.

அப்போது உலகமே அந்த காட்சியை பார்த்து அதிசயித்தது. மேலும் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்படுத்தினார். எட்வின் ஆல்ட்ரின் நிலவின் மேற்பரப்பில் 4 மணி நேரம் நடந்து சாதனை படைத்தார்.

அதன்பின், கடந்த 1971ம் ஆண்டு நாசாவில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இன்ஜினியரிங் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments