Home Uncategorized முல்லை பெரியாறு (மறக்கப்பட்டு மறைக்கப்பட்ட வரலாறு)

முல்லை பெரியாறு (மறக்கப்பட்டு மறைக்கப்பட்ட வரலாறு)

(மறக்கப்பட்டு மறைக்கப்பட்ட வரலாறு) இது ஒரு நூற்றாண்டு சபதம்.

பென்னி குயிக் …  

இன்று தமிழகத்தின் சில மாவட்டங்கள்  தெய்வமாக கொண்டாடும் புனிதப் பெயர்.  அதற்கு ஒரேயொரு காரணம் … ” தமிழக கேரள எல்லையில் கம்பீரமாக நிற்கும் முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்தப் பணத்தை முதலீடு செய்து, பென்னி குயிக் மக்களைக் காப்பாற்றினார் “ 

வரலாறு இப்படித் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை என்ன?  இதற்காக வரலற்றில் நீண்ட தூரம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 

1700 ஆம் ஆண்டுகளின் இறுதிப்பகுதி. தென் தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த, மிகவும் பிரபலமான சமஸ்தானம் இராமநாதபுரம் சீமை. அவ்வரிசையில் வந்தவர் மன்னர்  முத்துராமலிங்க சேதுபதி.  சமஸ்தானத்தின் திவானாக  பணிக்கு வந்தவர்  மிகவும் கெட்டிக்காரரான முத்திருளப்ப பிள்ளை என்பவர். 

Exit mobile version