மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காமாரெட்டி மாவட்டம் பிர்குர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்ற அவர் அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாதது கண்டு கோபம் அடைந்தார்.
இது குறித்து தன்னுடன் வந்த மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன் உடனடியாக பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
