தமிழ் சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் காலமானார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. பிறகு, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக, சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது நடிப்பு திறமையால், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கங்கா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
