சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் “டத்தோ” ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர்.
தலைவர் – ராதாரவி, பொதுச்செயலாளர் -T.N B கதிரவன், பொருளாளர் – A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார்.
துணைத்தலைவர் பதவிகளுக்கு – K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு, இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன் செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்ஷ்மி, சிபு, கௌதம்குமார், எம். சரவணன் பதவியேற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் சார்பிலும், காஸ்ட்யூமர் சங்கத்தினர் சார்பிலும், கலை இயக்குநர் சஙகம் சார்பிலும், டெக்னீஷியன் சங்கத்தினர் சார்பிலும், ஸ்டண்ட் யூனியன் சார்பிலும், சின்னத்திரை சங்கம், இயக்குநர் சங்கம் சார்பிலும், ஸ்டில் போட்டோகிராபர்ஸ் சங்கம் சார்பிலும் மரியாதை செய்யப்பட்டது.
தென்னிந்திய திரைத்துறை தொழிலாள்ர்கள், ஃபெஃப்சி சங்க தலைவர், இயக்குநர் செல்வமணி, வெற்றிபெற்ற சங்க தலைவர் ராதாரவிக்கு மாலையணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இயக்குநர் RK செல்வமணி பேசியதாவது…
நடந்து முடிந்த சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணன் ராதாரவி, கதிர்,சீனிவாசமூர்த்தி மற்றும் இணை செயலாளர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் சங்கத்தில் வந்து வேலை செய்யவே பயமாக இருக்கிறது. ராதாரவி அண்ணனை பார்த்து தான் நான் என்னை தேற்றி கொள்வேன். ஆனால் இப்போது அதுவே கடினமாக இருக்கிறது. நாம் பதவிக்கு வந்துவிட்டாலே நாம் மற்றகளுக்கு வேலை பார்க்கும் அடிமை போல் நினைத்து கொள்கிறார்கள். யார் யாருக்கெல்லாமோ பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. இது எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்து போகலாம் என்று நினைக்கும்போது, யாராவது” சார் உங்களால் தான் உயிரோடு இருக்கிறேன்” என்று சொல்வார்கள், அதை நினைத்து, திரும்பவும் இந்த இடத்தில் வந்து அமர வேண்டியிருக்கிறது. எங்கள் சங்கத்தில் வரும் சந்தாதொகை சம்பளம் கொடுக்கவே போதாது, இதில் நான் எங்கு ஊழல் செய்ய?… இந்த நிலை தான் எங்கும் உள்ளது. ராதாரவி அண்ணனை எதிர்த்தால் டெபாசிட் காலி என்பது இந்த தேர்தல் மூலம் உறுதியாகியுள்ளது. நல்லது செய்ய நினைப்பவர்கள் மீது பழி தான் விழுகிறது.
ராதாரவி அண்ணன் நான் உதவி இயக்குநராக இருந்த போது என்ன மரியாதை தந்தாரோ இப்போதும் அதே மரியாதை தான். நல்ல மனிதர் அவர். இங்கு நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சிறப்பான பணி செய்து சங்கத்திற்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும், நன்றி.
சம்மேளன செயலாளர் கிரிசன்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
சம்மேளன பொருளாளர் திரு.சுவாமிநாதன்,”
போனமுறையே அண்ணனிடம் நிரந்தர தலைவர் இருக்கும் போது தேர்தலே வேண்டாம் “என்றேன் ஆனால் எதற்காக இப்போது தேர்தல் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. பரவாயில்லை நம் பலம் தெரிந்துள்ளது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

