Home செய்திகள் NCERT-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியது கல்வி அமைச்சகம்!

NCERT-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியது கல்வி அமைச்சகம்!

Ai image

மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பரிந்துரையின் அடிப்படையில், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (NCERT) ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக’ (Deemed to be University) அறிவித்துள்ளது.

1961-ஆம் ஆண்டு பள்ளித் கல்வியின் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட NCERT, இனி வரும் காலங்களில் தனக்கெனப் புதிய ஆராய்ச்சிப் படிப்புகள், முனைவர் பட்ட ஆய்வுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான கல்வித் திட்டங்களைத் தாமாகவே தொடங்கி நடத்த முடியும்.

அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் ஆகிய இடங்களில் உள்ள மண்டலக் கல்வி நிறுவனங்கள் மற்றும் போபாலில் உள்ள தொழில்கல்வி நிறுவனம் என இதன் ஆறு உறுப்பு அமைப்புகளும் இனி இந்தப் பல்கலைக்கழக அந்தஸ்தின் கீழ் செயல்படும்.

பள்ளித் கல்வியில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து வழிகாட்டி வரும் NCERT-க்குக் கிடைத்துள்ள இந்தச் சிறப்பு அந்தஸ்து, இந்தியக் கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Exit mobile version