Home Uncategorized ஓபிஎஸ் தான் முதல்வராக அமர வைத்திருப்பேன் – சசிகலா ஆடியோ பேச்சு

ஓபிஎஸ் தான் முதல்வராக அமர வைத்திருப்பேன் – சசிகலா ஆடியோ பேச்சு

ஓபிஎஸ், அவராகத்தான் ராஜினாமா செய்தார்; அப்படி செய்திருக்காவிட்டால் அவரைத்தான் முதல்வராக அமர வைத்திருப்பேன் என சசிகலாவின் 44ஆவது ஆடியோ பேச்சு வெளியாகி இருக்கிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அவரது தோழி திருமதி. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும் அதிமுக கட்சியில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தான்அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.  அதிமுக தேர்தலில் தோற்று விட்டால் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தான் சசிகலா இந்த சதித் திட்டத்தை திட்டுவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது, இப்போது உண்மையாகி விட்டது.

Exit mobile version