இன்று அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பா.ஜ.க.வின் தலைவர்கள் சொல்லும் அளவுக்கு ஆணவம் அதிகரித்துள்ளது.
75 ஆண்டுகளாக நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்தது நமது அரசியலமைப்புச் சட்டம்தான்.
தொழிலாளர்களாக இருந்தாலும், விவசாயிகளாக இருந்தாலும், கிராமவாசிகளாக இருந்தாலும், பிரதமர்களாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அரசியலமைப்பின் முன் அனைவருக்கும் சம உரிமை உண்டு.
மக்கள் கையில் அதிகாரத்தை கொடுத்துள்ளது. பலவீனமானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பா.ஜ.க.வினரின் ஆணவத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அசாம் மாநிலம் துப்ரியில் இன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் @INCIndia பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் திருமதி @priyankagandhi அவர்கள் உரையாற்றினார்.
