பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவருமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பி.பி.ஸ்ரீநிவாஸ்; 83-வது வயதில் (2013) மறைந்தார்
