போலுவம்பட்டி வனச்சரகத்தில் நேற்று (14.6.21) இரவு இரு ஆண் யானைகள் காட்டை விட்டு வெளியே வர முற்பட்ட பொழுது நமது பணியாளர்கள் அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பினார்கள்.
ஆனால் அந்த இரு ஆண் யானைகள் தாணிகண்டி என்ற பழங்குடியினர் குடியிருப்பு வழியாக மீண்டும் இன்று (15.6.21) அதிகாலை வெளியே வந்து முட்டத்து வயல் என்ற குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தது. காலையில் அங்குள்ள மக்கள் பார்த்து வனப்பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள்.
