பருவமழையை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் புயல் வெள்ள காலங்களில் 24 மணி நேரமும் மருத்துவம், மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர், செவிலியர், மருத்துவர் குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
