தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26/11/2024) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இப்புயல் சின்னம் தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 600 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே- தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழக்கே 800 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இப்புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது. L
காலை முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ==> வரக்கூடிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டிணம் #திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பதிவாகும்.
#கடலூர் #புதுச்சேரி #தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும். ==> சென்னை, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் மழை துவங்கும், விட்டு விட்டு மழை பதிவாகும்.
