Home Uncategorized புயல் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது.

புயல் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது.

தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26/11/2024) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இப்புயல் சின்னம் தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 600 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே- தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழக்கே 800 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

இப்புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில் பெயரிடக்கூடிய புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது. L

காலை முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ==> வரக்கூடிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் #மயிலாடுதுறை #காரைக்கால் #நாகப்பட்டிணம் #திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பதிவாகும்.

#கடலூர் #புதுச்சேரி #தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும். ==> சென்னை, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் மழை துவங்கும், விட்டு விட்டு மழை பதிவாகும்.

Exit mobile version