தென் வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த சில மணிநேரங்களில் தாழ்வு மண்டலமாக (Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால்:
நாளை இரவு முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் மழை மீண்டும் தொடங்கும்.
சென்னை முதல் டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மகாபலிபுரம் முதல் டெல்டா வரை உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
சிறப்பு எச்சரிக்கை:
மேலைக்காற்று வளிமண்டல சுழற்சியின் தாக்கம் இருந்தால், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
