மகாராஷ்டிரக் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கொங்கன் மற்றும் கடலோர கர்நாடகப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது.
அதே வேளையில், தீபகற்ப இந்தியாவின் மழைமறைவுப் பிரதேசங்களான தமிழகச் சமவெளிப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், பலத்த மேற்குத் திசைக் காற்று வீசத் தொடங்குவதால் இடியுடன் கூடிய மழை கணிசமாகக் குறையக்கூடும்.
மேலும், தென்தமிழகப் பகுதிகள் தீபகற்ப இந்தியாவிலேயே மிக அதிக வெப்பம் பதிவாகும் மண்டலமாகத் தொடர்ந்து நீடிக்கும்.
