சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் ஆரம்பிக்கும் ஓட்டப்பந்தயம், மெரினா கலங்கரை விளக்கம், மெரினா லூப் சாலை வழியாக பெசன்ட் நகர் வரை நடக்கிறது.
இதனையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் ஓட்டப்பந்தயம் நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.
