Home செய்திகள் நடிகை மீரா மிதுனை கைது செய்ய அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுனை கைது செய்ய அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை மீரா மிதுனைக் கைது செய்யக்கோரி, புகார் எழுந்தது. 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை ஆஜர்படுத்தவும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version