நம்பெருமாள் வெண் பட்டு உடுத்தி மேலே மஞ்சள் நிற பட்டு கபா வஸ்திரம் சார்த்திக்கொண்டு திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி அதில் கலிங்கத்துராயுடன்,சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி மகர கர்ண பத்ரம் திருக்காதிலே சார் த்திக்கொண்டு, கண்டாபரணத்துடன் திருமார்பில் – சிகப்புக் கல் சூர்ய பதக்கம், அதன் மேல் – ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்,சந்திர ஹாரமும் வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் மிக மிக நேர்த்தியாக அணிந்து தங்கப் பூண் பவழ மாலை ,2 வட முத்து மாலை ,திருப்பாவை மரகத பச்சை கிளி ” பதக்கம் அணிந்து பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம் – புஜ கீர்த்தி அணிந்து
சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி மேலைப்படி மரியாதை ஆகி சேனைமுதலியாருக்கும் மரியாதைகள் நடந்து, கிளிமண்டபம் படியேற்றம் ஆகி,துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து, தாம்பூலம் பெற்றுக்கொண்டு அரையர்களின் தாளத்துடன் அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் அரங்கனின் அடியார்கள் புடைசூழ வீற்றிருப்பார்.
அரையர் ஸ்வாமிகள் இன்று மதுரகவியாழ்வார் அருளிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” 11 பாசுரங்களும், இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழியில் 249 பாசுரங்களும் ஆக மொத்தம் 260 பாசுரங்கள் சேவிக்கப்படும்.பெரிய திருமொழியில் 3 ம் திருமொழி 6ம் பாசுரம் தூவிய மலர் உழக்கி ஈறாக பெரிய திருமொழியின் 249 பாசுரங்களும் இன்று சேவிக்கப்படும். “கண்ணிநுண் சிறுத்தாம்பு” “வாடினேன் வாடி”(பெரிய திருமொழி 1-1-1) இரண்டுக்கும் அபிநய வியாக்கியானங்கள் அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும்.
“கண்ணிநுண் சிறுத்தாம்பில்” ஈடுபட்ட ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதியில் இருந்து, இன்று அரையர் ஸ்வாமிகளுக்கு பஹுமாணம் அனுப்பி வைக்கப்படும்.

அத்யயன உற்சவத்தின் சிறப்புக்கள்.
ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு முற்பட்ட காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானமும் ஆச்சாரியர்கள் நியமித்து அருளிய பாசுரங்களுக்கு மட்டும் அபிநயங்களும் நடைபெற்று வந்தன.அரையர் வம்சத்திற்கு “தம்பிரான்மார்” என்ற பெயர் உண்டு.அவர்கள் அருளிச்செய்த விரிவுரைகளே பல ஆண்டுகளாக அரங்கன் ஆலயத்தில் சேவிக்கப்பட்டு வந்த போதிலும் திருவாய்மொழிக்கு ஸ்வாமி “நம்பிள்ளை” ஈடு வியாக்கியானம் மற்றைய திவ்ய பிரபந்தங்களுக்கு ஸ்வாமி “பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த வியாக்கியானங்கள் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானங்கள் கிடைக்காத சில “பெரியாழ்வார் திருமொழி” பாசுரங்களுக்கு ஸ்வாமி” ஸ்ரீ மணவாள மாமுனிகள்” அருளிய வியாக்கியானங்கள் ஆக இந்த மூன்று வியாக்கியானங்களே “ஸ்ரீ கோசத்தை” பார்க்காமல் வரி தவறாமல் இன்றும் அரையர்களால் சேவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி “ஸ்ரீ மணவாள மாமுனிகள்” நம்பெருமாளுக்கு அவற்றைக் காலக்ஷேபம் சாதித்த நிகழ்வை நினைவூட்டுவதாகும்.
இந்த மூன்றுவியாக்கியானங்களுடன் அரையர்களின் முன்னோர்களால் சாதிக்கப்பட்ட “தம்பிரான்மார்” வியாக்கியானங்களும் சேர்த்து, சேவிக்கப்படுகிறது.வேறு எந்த வியாக்கியானங்களுக்கும் அரங்கன் ஆலயத்தில் சேவிக்க அனுமதி இல்லை.
பகல் பத்து மற்றும் இராப்பத்து திருநாட்களில் அரையர் சேவையில் அபிநயம் பூர்த்தியானதும் வியாக்கியானத்துக்கு முன்பாக நம்பெருமாளின் நியமனம் பெற்று ஆழ்வார்களிடம் வந்து ஆழ்வார் கொண்டாட்டம் சேவித்து அனுமதியுடன்
நம்மாழ்வார் மற்றும் எம்பெருமானாரின் மாலைகள் படிகளைந்து இரண்டு அரையர்களுக்கும் சாதிக்கபடுகிறது.
அரையர் சேவை முடிந்ததும் கோஷ்டியில் இருக்கும் அத்யாபகர்கள் நம்பெருமாளைச் சென்று சேவிப்பார்கள் அர்ச்சகர் அவர்களுக்கு ஸ்ரீசடகோபம் சாதிப்பார், பிறகு அலங்காரம் எனப்படுகின்ற திருப்பணியாரங்களும் தோசைப் பிரசாதங்களும் நம்பெருமாளுக்கு நிவேதனம் செய்ய திரை சமர்ப்பிக்கப்படும்.
நம்பெருமாள் பிரசாதங்களை அமுது செய்த பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு அமுது(நிவேதனம்) செய்யப்படும். அருளப்பாடு கிரமத்திலேயே நிவேதனம் நடைபெறும்,ஆனால் உடையவர்,பிள்ளை லோகாச்சாரியார், கூரத்தாழ்வான் இவர்களுக்கு மட்டும்,”திருக்கச்சி நம்பிகள்” நிவேதனம் செய்த பிறகு செய்யப்படும். நம்மாழ்வார் அமுது செய்த பிரசாதம், அரையர்களுக்கு உரியதாகையாலே அந்த பிரசாதங்கள் அரையர்களின் திருமாளிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.நிவேதன விநியோகங்களும் நடைபெறும் அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.அதன் பிறகு ஆழ்வார் ஆச்சாரியர்கள் ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன் தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.
நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள “மீனாட்சி மண்டபத்தில்”தீர்த்த கோஷ்டி நடைபெறும்.சிறிது நேரம் நம்பெருமாள்,”பத்தி உலாத்துதல்” ஆகி மேலப்படியில் படியேற்றம் ஆகி திருவந்திக்காப்பு கண்டருளுவார். பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில் காயத்ரிமண்டபம் எழுந்தருளுவார்.