மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

நீண்டகால அரசியல் போராட்டத்திற்குப் பிறகு இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்திய அவர், இந்த மகத்தான வெற்றி என்பது கட்சியின் வளர்ச்சிக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த 300-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுவதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
அவர்களின் தியாகமும் உழைப்பும்தான் மாநிலத்தில் தாமரை மலர அடித்தளமாக அமைந்ததாகவும், மக்களுக்கான நல்ஆட்சியை வழங்குவதே அந்தத் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான மரியாதை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.