Home Uncategorized தாமிரபரணி நதியில் மத்திய அரசு குழு ஆய்வு

தாமிரபரணி நதியில் மத்திய அரசு குழு ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலை தூய்மை பணியினை மத்திய அரசின் குடிநீர் வழங்கல்  துறை அதிகாரிகள்  குழு ஆய்வு செய்தது. 

அப்போது நம் தாமிரபரணி அமைப்பு சார்பாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து முதல்  45நாட்கள் மேல நத்தம் முதல் தருவை மற்றும் கருப்பந்துறை முதல் திருவேங்கட நாதபுரம் வரை இரு கரைகளிலும் சுமார் 8கி.மீட்டர் தூரம் மேற்கொண்ட தூய்மை களப்பணியையும்  மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது.

  நம் தாமிரபரணி அமைப்பினர் அந்தப்  பணிகள் குறித்து குழுவினரிடம் விளக்கம் அளித்தனர். 

அதில் திருப்தி அடைந்த மத்திய அரசின் குழு நம் தாமிரபரணி மேற்கொண்ட பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

Exit mobile version