Saturday, March 21, 2026
HomeUncategorizedடி.என்.சேஷன்பிறந்த நாளின்று

டி.என்.சேஷன்பிறந்த நாளின்று

இவரை இந்திய தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என்றே அழைத்தார்கள். கடந்த 1932ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லையில் பிறந்தார். 1955ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார்.

தமிழகம் மற்றும் மத்திய அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். இதையடுத்து 1990ஆம் ஆண்டு இந்தியாவின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற வழக்கத்தை கொண்டு வந்தார். வெறும் காகிதத்தில் இருந்ததை செயல்படுத்திக் காட்டினார்.

வாக்குச் சாவடிகளில் 2 லட்சம் அரசுப் பணியாளர்களை அமர்த்தி சாதனை படைத்திருக்கிறார். இவரது செயல்பாடுகளால் தேர்தல் நாளில் நிகழ்ந்து வந்த கொலைக் குற்றங்கள் பெருமளவு குறைந்தன.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வந்தன. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்குகள் பற்றிய விவரங்களை ஆணையத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான அதிகபட்ச வரம்பை நிர்ணயித்தார்.

வாக்குச்சாவடி முகவர்களுக்கான விதிகளை கொண்டு வந்தார். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அரசியல் கட்சியினர் யாரும் அழைத்து வரக் கூடாது என்று உத்தரவிட்டார். தலித்களும், மலைவாழ் மக்களும் தேர்தலில் வாக்களிப்பத்தை ஊக்கப்படுத்தினார்.

தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகள் அருகே கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார். முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களை நியமித்தார். இவர்கள் தேர்தலின் போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர்.

வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் தவறான நடைமுறையை தடுக்க வழிவகை செய்தார். தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாக தேர்தல் ஆணையம் உருவெடுக்க அடித்தளமிட்டார். தலைமை தேர்தல் ஆணையர் தவிர மேலும் இரண்டு ஆணையர்களை நியமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

ஒட்டுமொத்தமாக மிகவும் கண்டிப்பான தேர்தல் ஆணையர் என்ற பெயரை இதுவரை இவரே முழுமையாக பெற்றிருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments