Home Uncategorized திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

தமிழகத்தில் பனைமரத்தால் ஆன முருகப்பெருமானை தலமாக கொண்டு விளங்கும் திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் திருவிழா அழைப்பிதழ்!!

இந்த கோவில் மற்றும் குளமும்  300 ஆண்டுகால இடைப்பட்ட காலத்தில் உருவானதாக கூறுவார்கள்.. என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது.

13ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது…
மூல மூர்த்தி  பனையடியில் புதைந்திருக்கிறார். ஆதலால் புற்றிடங் கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுசட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். 
அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும்…

Exit mobile version