Home Uncategorized தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளதால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.

இதனால், இன்றும், நாளையும் வடதமிழ்நாட்டில் மிக அதிக அளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Exit mobile version