Home செய்திகள் தமிழகத் தேர்தல் 2026: பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு வேண்டுகோள்!

தமிழகத் தேர்தல் 2026: பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு வேண்டுகோள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்குத் தமிழில் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தமிழகத்தின் இளைய தலைமுறையினரும், பெண்களும் முன்வந்து அதிக அளவில் திரண்டு வாக்களித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய சாதனை அளவிலான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பிரதமரின் இந்த அழைப்பு அமைந்துள்ளது.

Exit mobile version