கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் மண்டல மகோத்ஸவ விழா நேற்று நிறை வடைந்தது. இக்கோயிலுக்குரிய திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி புனலூர் கருவூலத்திலிருந்து கடந்த 15 ஆம் தேதி இரு மாநில போலீசார் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.
வரும் வழியில் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்கள் அதற்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். தற்போது விழா முடிந்து இந்த திருவாரூர் பெட்டி மீண்டும் புனலூர் கருவூலத்திற்கு புறப்பட்டது. திருவாபரண கோஷ யாத்திரை தமிழக தலைவர் ஏ ஜி எஸ் ஜி ஹரிஹரன் தலைமையில் திருவாபரண பெட்டி புனலூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
