அன்புள்ள, மரியாதைக்குரிய மேரி அவர்களுக்கு வணக்கம்.
துப்புரவுப் பணியாளரான உங்கள் நற்செயலை பாராட்டவே இக்கடிதம்.
தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடையுள்ள,
ரூபாய் 5 லட்ஷம் மதிப்புள்ள தங்கத்தை, குப்பையை பிரிக்கும் போது
கண்டுபிடித்த நீங்கள், போலீசாரை உடனடியாக தொடர்பு கொண்டு
அந்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த நல்ல மனத்தையும் ,குணத்தையும்
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பணமே முக்கியம் ,நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என
நினைக்கும் இக்காலத்தில் , வறுமையிலும் , ஏழ்மையிலும் அடுத்தவர்
பொருள் நமக்கு வேண்டாம் என
நினைத்த உங்களின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி
என் தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூபாய் 5000/- தங்களுக்கு
வழங்குவதில் பெருமை அடைகின்றேன்.
தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து செல்வங்களையும்
நோயற்ற வாழ்வையும் வழங்க ஆண்டவனை வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன்
S VE SHEKHER
முழு காணொளியை பார்க்க…

