திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூன்28) சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலைகடலென குவிந்து வருகின்றனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் கடற்கரையில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
