Home Uncategorized உச்சநீதி மன்றத்தில் இன்று நடந்த அதிமுக தலைமை கழகம் தொடர்பான வழக்கு:

உச்சநீதி மன்றத்தில் இன்று நடந்த அதிமுக தலைமை கழகம் தொடர்பான வழக்கு:

அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அப்பீல் மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு  தடை விதிக்க மறுத்து விட்டது. 

மேலும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், தலைமை கழக அலுலகத்திற்கு ஓபிஎஸ் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியதற்கு அனுமதி மறுத்து விட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

− வழக்கறிஞர் இன்பதுரை

கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்

Exit mobile version