மதுரையில் உள்ள வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் பொது மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், “வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
