விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் – இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம் எல் ஏ வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
