விருதுநகரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி செல்லும் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது.
ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதலிப்பது போல் நடித்து, ஆபாச படம் பிடித்துள்ளார். வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.
