2024-2025ஆம் ஆண்டுகளில் கூகுள், அமேசான், மெட்டா, சிஸ்கோ போன்ற முன்னணி நிறுவனங்கள், உலகளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை, பணிநீக்கம் செய்துள்ளன. இந்தியாவில் மட்டும் 2023இல் 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். செயல்களை மனித உதவியில்லாமல் இயங்கச் செய்யும் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி புதிய சவால்களை முன்வைக்கிறது.
குறிப்பாக, CHAT GPT, GEMINI, COPILOT போன்றவற்றின் பயன்பாடு, குறைந்த திறனுள்ள பணிகளை மாற்றி, வேலை வாய்ப்புகளை குறைத்துள்ளது.
