தவறான கணக்குகளை தாக்கல் செய்த, கணக்கே தாக்கல் செய்யாத, 10,000 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் ஆன்லைன் வழி ஆண்டறிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவற்றில், பல்வேறு முரண்பாடுகள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
