சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி தேங்காய்களை எடுத்துச் செல்வதற்கு சிறப்பு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிப்பு
2025 ஜனவரி 20ம் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது கொண்டு செல்லும் இருமுடியை விமானத்தின் கேபினுக்குள் கொண்டு செல்ல சிறப்பு விலக்கு வழங்கி உள்ளதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு இருமுடி விமானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

