சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பினை வழங்குகிறது என மத்திய அரசு தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக. இசட் பிளஸ் (+Z+ Security ) அளவிலான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

