பெண்தெய்வ வழிபாடு என்பது பாரததேசத்தின் ஒரு அங்கம்.
பக்தி சிரத்தையுடன் மக்கள் வழிபடும் பெண் தெய்வங்கள் பல உண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்.
எளிய தோற்றம், ருத்ர கோலம், சாந்த சொரூபம் என பல்வேறு வகையில் தோற்றமளிப்பினும், அளவற்ற கருணை பொழிவதில் அனைத்தும் ஒன்றே.
அப்படி கருணைசெய்யும் கலியுக நாயகியாய் விளங்குகிறாள்; பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிறுவாச்சூரில், கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு மதுரகாளியம்மன்.
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தலம் இது. பிற்கால சோழர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்டு, நித்ய பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

