மனித உடலின் மூளைப்பகக்கத்தில் உணர்ச்சி நரம்புகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ”ஹிப்போதலாமஸ்” எனும் பகுதியுள்ளது. நரம்புகள் நெற்றியின் புருவமத்தியிலிருந்து, மூக்கில் மெல்லிய கிளைகளாகப் பிரிந்து நுண்ணியமாக பரவியுள்ளன.
அந்தப் பகுதியில் மெல்லிய துளையிடுவதனாலும், அங்கு தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணத்தை மூக்குத்தியாக அணிவதாலும், பருவப்பெண்களின் கபாலமென்னும் மண்டையில் தேங்கியுள்ள வாயுக்களை அகற்றுகிறது.
மூக்கு குத்திக்கொள்வதால், பெண்களுக்கு வரக்கூடிய சளி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான கோளாறுகள் மற்றும் பார்வை சம்பந்தமான குறைபாடுகள் சரியாகுமெனக் கூறுகிறார்கள்.

