தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி,தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய ‘நாடகக் காவலர்’ என்று அனைவராலும் போற்றப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர்,
இவர் நாமக்கல்லில் 1925 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் ஊழியராக பணியாற்றியவர். இவர் தன்னுடைய சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். ‘வண்ணக்கிளி’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘இதயக்கனி’ உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

