நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளில் 1,487 மருந்துகள் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

