Tuesday, March 10, 2026
HomeUncategorizedசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

மேலும், சென்னை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதிலும் குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, தாம்பரம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments