தமிழகம் – ஆந்திர ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை குடிநீர் தேவைக்காக 12டிஎம்சி தண்ணீர் தரப்படவேண்டும். அந்த வகையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், இருமுறை கடிதம் எழுதிய நிலையில், கண்டலேறு அணையிலிருந்து கடந்த 14ம் தேதி விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதுச
இதனை, தமிழ்நாடு எல்லையான ஜீரோ பாயிண்டில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது பால் வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்றனர்.
