விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக டிச.10 முதல் டிச.13 வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மாலைப்பகுதியில் மழை பெய்து வருவதையடுத்து சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

