அசுரனைப் போலவே ஒரு நாவலை தழுவி இந்தப்படத்தை வெற்றிமாறன் எடுக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்தப் படம்.வாடிவாசல் நாவலுடன் வெற்றிமாறன் தனது கற்பனையில் ஒரு பின்கதை இணைத்து வாடிவாசலை எடுக்கிறார்.
இந்த பின் கதையின் காரணமாக படத்தின் பட்ஜெட் 200 கோடிவரை வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையானால் சூர்யா, வெற்றிமாறன் இருவரது திரைவாழ்க்கையிலும் அதிக பட்ஜெட் படமாக வாடிவாசல் இருக்கும்.
